வால்பாறை வருவாய் கோட்டாட்சியர் சார்பில் வால்பாறையில் செயல்பட்டு வரும் பாரதியார் பல்கலைக் கழகத்திற்குட்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவர்கள் இணைந்து இன்று தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இப்பேரணியின் போது இந்திய ஜனாநாயகத்தில் ஒவ்வொரு குடிமகனும் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது நமது கடமையாகும், வாக்குகளை விலைக்கு கொடுக்க மாட்டோம் உள்ளிட்ட முழுக்கங்களை எழுப்பியபடி மாணவ, மாணவிகள் பேரணியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அக்கல்லூரி வளாகத்தில் தொடங்கிய இப்பேரணி தபால் நிலையம் வரை சென்று பிறகு காந்தி சிலையில் இருந்து வாழைத்தோட்டம் மற்றும் முக்கிய வீதிகளின் வழியாக புதிய பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து கல்லூரியை வந்தடைந்தனர்.
பேரணியை கல்லூரி முதல்வரும், வால்பாறை வட்டாட்சியரும் துவங்கி வைத்தனர். இப்பேரணியில் கல்லூரி பேராசிரியர் பெரியசாமி நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் பேராசிரியர்களும் கலந்துகொண்டனர்.