ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமம் மற்றும் நியூயார்க்கின் கண்காடியா கல்விக் குழுமம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் துவக்கம்


கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமத்தைச் சார்ந்த ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் செயல்பட்டு வரும் கண்காடியா கல்லூரியிடையே இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது.



ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி மற்றும் கண்காடியா கல்லூரியின் நிர்வாகத் துணைத் தலைவர் முனைவர் ஜேம்ஸ் கிரிஸ்டியன் பர்க்கி ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதன் மூலம் ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை பயிலும் மாணவர்கள் முதல் இரண்டு வருடங்களை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்று மீதமுள்ள ஒரு வருடத்தினை அமெரிக்காவில் உள்ள கண்காடியா கல்லூரியில் கல்வி உதவித் தொகை பெற்று பயில்வார்கள்.

முழுமையான வருடங்களை முடித்த பின்னர் இம்மாணவர்கள் மேலும் ஒரு வருடம் அமெரிக்காவில் இதே கல்லூரியில் முதுகலை மேலாண்மை பட்டத்தினை பெறலாம். மேலும், இத்திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு புதுமையான முறையில் கல்விகள் வழங்கப்பட உள்ளது.



இந்நிகழ்ச்சியில், இக்கல்விக் குழுமங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் கி.சுந்தரராமன், கல்லூரி முதல்வர் பாபாஞானகுமார், துறைத் தலைவர்கள் சுமதி, அன்புமலர், சந்தானலட்சுமி, விஜிமோல், பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...