மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையைக் கண்டித்து கோவை வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்


தமிழகம் முழுவதும் நேற்று ஜல்லிக்கட்டு விவகார போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். இதில், மாணவர்களின் அறப்போராட்டத்திற்கு ஆதரவாக இருந்த வழக்கறிஞர்களையும் காவல்துறையினர் தாக்கினர்.

இந்த தாக்குதலால், பல மாணவர்கள், பெண்கள், வழக்கறிஞர்கள் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சில இளைஞர்கள் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டு வருகிறது. 

இதனைத்தொடர்ந்து, மாணவர்கள் மீதும், பெண்கள், வழக்கறிஞர்கள் மீதும் தாக்குதல் நடத்திய காவல்துறையைக் கண்டித்து கோவை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில், கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தாக்குதல் நடத்திய காவல்துறையினரைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பி தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.



Newsletter

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...