கோவையில் மாணவர்களின் தடையை மீறி ரேக்ளா போட்டி துவக்கி வைத்த அமைச்சரின் கார் முற்றுகை

ஜல்லிக்கட்டிற்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று கோவையில் ரேக்ளா போட்டிக்கு மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக கொடிசியா மைதானத்தில் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 

இதற்கிடையே, தற்போது உள்ள அவசரச்சட்டம் வேண்டாம் எனவும் ஜல்லிக்கட்டு மீதான தடைகள் நிரந்தரமாக நீங்க வேண்டும் எனவும் இந்த போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், கொடிசியா வளாகத்தில் இன்று ரேக்ளா போட்டி துவங்கியது. இதனை அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்து, செய்தியாளர்களைச் சந்தித்த போது, இப்போராட்டத்திற்கு அவசரச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது அதிமுக-விற்கு கிடைத்த வெற்றி என உரையாற்றினார்.



இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜல்லிக்கட்டு மீதான தடைகள் அனைத்தும் நீங்கும் வரை ரேக்ளா, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகள் நடைபெறக் கூடாது எனவும் கூறிய இளைஞர்கள் தொடர்ந்து, அமைச்சரின் காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனைத்தொடர்ந்து, கொடிசியா வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், இளைஞர்களுடன் கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.





Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...