சிரியாவில் திருமண விழாவில் தற்கொலைப்படை தாக்குதல்; 32 பேர் பலி

பெய்ரூட்: சிரியாவிலுள்ள டால்டவில் எனும் கிராமத்தில் திருமண விழாவில் பயங்கரவாதி ஒருவன் நடத்திய தற்கொலைபடை தாக்குதலில் 32 பேர் உடல் சிதறி பலியாயினர். பலர் படுகாயமடைந்தனர்.

தற்கொலைப்படை தாக்குதல்:

சிரியாவின் வடகிழக்கு பகுதியிலுள்ள டால்டவில் எனும் கிராமத்தில் நடந்த திருமண விழாவில் நுழைந்த பயங்கரவாதி, மணமக்கள் திருமணத்துக்கான உறுதி மொழிகளை எடுத்து கொண்டிருக்கும் போது, தன் உடம்பில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இதில் 32 பேர் பலியாயினர்; நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் (அக்.,3) நள்ளிரவில் நடந்துள்ளது.

ஐ.எஸ்., பொறுப்பேற்பு:

இத்தற்கொலைப்படை தாக்குதலில் மணமக்கள் உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, தங்கள் இயக்கத்தை சேர்ந்த போராளி, துப்பாக்கிச்சூடு நடத்தி, பின் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து 40க்கும் மேற்பட்டோரை கொன்றதாக தெரிவித்துள்ளது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...