கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேதி நிலவரப்படி உயர்ந்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Coimbatore: கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர்ந்து உயர்ந்து வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனைமலையை அடுத்த ஆழியார் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடியாகும். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் நீர் வரத்தால் ஆகஸ்ட் 5ஆம் தேதி நிலவரப்படி 56.51 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 379 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மழைப்பொழிவு குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் கொள்ளளவு 72 அடியாகும். மொத்த கொள்ளளவில் இன்று (ஆகஸ்ட் 5) நிலவரப்படி நீர்மட்டம் 29.88 அடியை எட்டியுள்ளது. மேலும் அணைக்கு வினாடிக்கு 1913 கன அடி நீர் வரத்து உள்ளது. 60 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் தொடர்ந்து உயரும் நிலையில் உள்ளது. இதனால் பொள்ளாச்சி பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வால்பாறை அருகேயுள்ள சோலையாறு அணையின் மொத்த கொள்ளளவு 160 அடியாகும். இந்த நிலையில் அணையின் இன்றைய (ஆகஸ்ட் 5) நிலவரப்படி நீர்மட்டம் 94.92 அடியை எட்டியுள்ளது. மேலும் சோலையாறு அணைக்கு வினாடிக்கு 2734 கன அடி நீர் வரத்து உள்ளது மற்றும் 1630 கன அடி வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து அணையின் நீர்மட்டம் உயரும் நிலையில் உள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், மாவட்டத்தின் மூன்று முக்கிய அணைகளிலும் நீர்வரத்து சீராக உள்ளது. இதனால் விவசாயத்திற்கு போதுமான அளவு நீர் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். மேலும் மழை தொடர்ந்தால் அணைகளின் நீர்மட்டம் மேலும் உயரும் என நீர்வளத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...